தேனடை
“ஏலே மாயாண்டி அந்தக் கம்பை இப்படி எடுத்துப்போடு” “எல கத்தாம பேசுல வெங்கம்பயலே தோப்புக்காரன் வந்துரப்போறான்” "வந்தா வெள்ளப்பாண்டி தான் வரணும். அவன் தான் ஊர்லயே இல்ல இன்னைக்கு” “சேரி சேரி நீ முதல்ல தீப்பந்தத்த ஒழுங்காப் புடி. ஏ கண்ணா நீ வேலிக்கிட்ட மறைஞ்சு நின்னுக்கோ. ஆள் யாரும் வந்தா சத்தங்குடு. யேலே தொரப்பாண்டி மரத்துல நீ ஏறாத, உங்கம்மைய கிட்ட நாங்க பேச்சு வாங்க முடியாது, தீப்பந்தத்த புடிச்சு கொளவிய வெரட்டுனா மட்டும் போதும். எலே மயிருபுடுங்கிகளா கொளவி வெரட்டி வந்துச்சுன்னா நேரா கெணத்தங்கரை திசை பக்கமா எல்லாரும் ஓடீருங்க சொல்லிட்டேன்” முதலியார் தோட்டத்தில் பலாப்பழம் தண்டிக்கு தேன்கூடு கட்டியிருப்பதைப் பள்ளிக்கூடத்தில் “ஒரு ரகசியம் சொன்னா குச்சு தருவியா” என்று வசந்தி தான் சொன்னாள். குச்சி பெரிய விசயமில்லை. ரகசியம் என்னதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமானதும் அரைக்குச்சியை நீட்டி காது கொடுத்தேன். அடுத்தநாள் வெளிக்கிப் போகும் சாக்கில் முதலியார் தோட்டத்தை எட்டிப் பார்த்த போது வசந்தி சொன்னது போலவே பலாப்பழதண்டிக்கு மாமரத்தில் தேன்கூடு கட்டியிருந்தது. தோட்டத்தில் வெள்ளைச்சாமியண்